மோனலிசா
பித்தளைத் தட்டிலிருந்து (Brass Plate) பிறழாத கால்களுடனும் சுடர்விடும் விளக்கை ஏந்திய கைகளுடனும் குச்சிப்புடி அரங்கேற்ற நடனமாடி பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார் 14 வயதாகும் சுதிக்ஷா திவாகரன்.
ஆண்டிறுதி விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட டெசாரு கடற்கரை தினசரி சிறப்புப் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக வீடு வாங்குவதை மையப்படுத்தி ‘ராசி’ எனும் புதிய நகைச்சுவை நாடகத்தை அவான்ட் நாடகக்குழு அரங்கேற்றவுள்ளது. இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டரில் இரவு 8 மணிக்கு இந்த நாடகம் அரங்கேற்றப்படும்.
தீபாவளித் திருநாளில் மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பண்டிகை குதூகலத்தில் திளைத்திருந்தபோது காவல்துறை சீருடையில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கம்பீரமாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டார் நிவேதா விஜயகுமார்.
தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்தவர்களைக் கெளரவிக்கும் விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு ‘நினைவின் தடங்கள்’ எனும் நிகழ்ச்சியை 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
தங்க முனை விருதினை இவ்வாண்டு நான்கு மொழிகளிலும் மொத்தம் 44 பேர் பெற்றுள்ளனர். தேசியக் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்தப் படைப்பிலக்கியப் போட்டியில் இவ்வாண்டு ஒட்டுமொத்தமாக 900க்கும் மேற்பட்ட படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக ஒன்பது முதல் பன்னிரண்டு வயது வரையிலான பிள்ளைகளுக்கான 10 தாய்மொழிப் புத்தகங்கள் அண்மையில் வெளியீடு கண்டன.
சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டம் இவ்வாண்டு 153 மாணவர்களுக்கு $287,500 அளவிலான உதவித்தொகையை வழங்கியுள்ளது.
தேவையுடையோருக்கும் வசதி குறைந்தோருக்கும் இன, சமய பாகுபாடுகளின்றி சேவையாற்ற வேண்டும் என்றும் இதன் மூலம் பல்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் மத்தியிலான பிணைப்பு வலுப்படும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
விண்வெளியில் மனிதர்கள் சென்று வாழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அறிவியல் துறையில் அதற்கான அடித்தளத்தை என் போன்ற இளையர்கள் முன்னெடுத்து வருகிறோம் என்றும் கூறுகிறார் சிங்கப்பூர் விண்வெளித் துறை சார்ந்த தனியார் நிறுவனமான ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ஸின் இணை நிறுவனரும் தலைமை இயக்க அதிகாரியுமான திரு பிரவீன் கணபதிபெருமாள், 31.
28 Apr 2024
13 Apr 2024
30 Mar 2024