28 ஆண்டுகளுக்குப்பின் இணைந்து நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள்

இந்தித் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கானும் சல்மான்கானும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘டைகர் Vs பதான்’ எனும் படத்தில் அவர்கள் இருவரும் இணையவுள்ளனர் என்று  பொழுதுபோக்கு இணையத்தளமான ‘டெட்லைன்’ செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஷாருக் நடிப்பில் அண்மையில் வெளியாகி, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘பதான்’ படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார்.

இந்நிலையில், “ஷாருக்கையும் சல்மானையும் ஒரு முழுப் படத்திலும் இணைந்து நடிக்க வைக்கவுள்ளார் சித்தார்த். இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே இதுவே ஆகப் பெரிய படமாக இருப்பதற்குத் தேவையான ஆதரவு அனைத்தும் சித்தார்த்திற்கு வழங்கப்படும்,” என்று இந்தித் திரையுலக வட்டாரம் கூறியதாக ‘டெட்லைன்’ குறிப்பிட்டுள்ளது.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக, 1995ஆம் ஆண்டு ‘கரண் அர்ஜூன்’ படத்தில் ஷாருக்கும் சல்மானும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் முழுப் படத்திலும் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. ‘பதான்’ படத்தில் சல்மான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!