கொவிட்-19லிருந்து தேறிவரும் நோயாளிகள் தங்க தயாராகும் என்யுஎஸ் குடியிருப்பு வளாகம்
உடல்நலம் தேறி வரும் கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ‘பிரின்ஸ் ஜோர்ஜஸ் பார்க் ரெசிடன்ஸ்’, தற்காலிக சமூக பராமரிப்பு வசதியாக அடுத்த வாரம் மாறவுள்ளது.
குணமடைந்து வரும் கொவிட்-19 நோயாளிகள் தங்க, இக்குடியிருப்பு வளாகத்தில் உள்ள 28 புளோக்குகள் இம்மாதம் 18ஆம் தேதி முதல் ஜூலை மாதம் வரையில் இயங்கும்.
இங்கு கிட்டத்தட்ட 2,900 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறி, மேற்கொண்டு சிகிச்சை தேவைப்படாது என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே சமூக பராமரிப்பு வசதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இவ்விடத்திற்குக் கொண்டுவரப்படும் நோயாளிகளின் நடமாட்டத்தை அணுக்கமாகக் கண்காணிப்பது, அடிக்கடி இடத்தைச் சுத்தம் செய்வது, நோயாளிகளுக்கென தனி போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online