'ஃபைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே கிருமிக்கு எதிரான பாதுகாப்பில் 3ல் இரண்டு பங்கு கிடைத்துவிடும்'
ஃபைஸர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்தை ஒருமுறை போட்டுக்கொண்டாலே கொரோனா கிருமிக்கு எதிரான பாதுகாப்பில் மூன்றில் இருமடங்கு கிடைத்துவிடும் என பிரிட்டனில் வெளியாகி உள்ள தரவு ஒன்று தெரிவிக்கிறது. அதனை பிரிட்டன் அரசாங்கம் சரிபார்த்துள்ளது.
கிருமி தொற்றியதற்கான அறிகுறியுடன் இருக்கும் நோயாளிகளில் இளையவர்கள் ஒருமுறை ஃபைஸர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது அவர்களுக்கு 65 விழுக்காடு பாதுகாப்பும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 64 விழுக்காடு பாதுகாப்பும் கிடைக்கிறது என்று இந்த விவரங்களை அறிந்த ஒருவர் புளூம்பெர்க் செய்தியிடம் கூறினார். இரண்டாம் முறை அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்போது வயதுக்கேற்ப 79 விழுக்காடு முதல் 84 விழுக்காடு வரை பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது என்றும் அந்தத் தரவு குறிப்பிடுகிறது.
தடுப்பூசி மருந்தின் செயல்திறன் தொடர்பான இந்தத் தரவு முதன்முதலில் ‘த சன்’ செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தில் கண்டறிந்தவற்றை தரவு உள்ளடக்கி உள்ளது.
ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரியான பாதுகாப்பு கிடைப்பதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.
தரவில் தெரிவிக்கப்பட்ட ஆற்றல் விகிதம் ஃபைஸரின் மருந்தக சோதனை முறையில் காணப்பட்டதைக் காட்டிலும் குறைவு என்றபோதிலும் இந்தத் தரவு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களை ஊக்கப்படுத்த உதவும் என போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் நம்புகிறது. பல மாதங்களாக முடக்கப்பட்டுள்ள பொருளியலை மீண்டும் திறந்துவிட தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி கைகொடுக்கும் என்பது அதன் கணிப்பு.
ெசவ்வாய்க்கிழமை நிலவரப்படி பிரிட்டனில் 12.6 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார். ஃபைஸர் அல்லது ஆக்ஸ்ஃபர்-ஆஸ்ட்ராஸெனகா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அவர்களுக்குச் செலுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, 80 வயதுக்கு மேற்பட்டோரில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஆக அண்மைய தரவு கூறுகிறது.
முடக்கநிலை காரணமாக பிரிட்டன் 300 ஆண்டுகளில் காணாத ஆக மோசமான பொருளியல் சரிவைச் சந்தித்துள்ளது.
அதனை மீட்ெடக்கும் முயற்சி களில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டன் படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங் களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசி மீது பிரிட்டனுக்கு நம்பிக்கை இருந்தபோதிலும் புதிய வகைக் கிருமியை அது முறியடிக்கு மா என்ற ஐயத்தைப் போக்கும் வகையில் திரு ஜான்சன் இவ்வாரம் விளக்கம் அளித்தார்.