தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூடுதல் கண்காணிப்பு
நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்த இரண்டு பிரபல சந்தைகளிலும் சமூக இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அங்கு கூடுதல் அதிகாரிகள் நிறுத்தப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் வாரியம் கூறியது.
சந்தைகளில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதை அதிகாரிகள் தடுப்பர் என்று வாரியம் கூறியது.
பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் சந்தையின் தரையில் குறியீடுகள் இருக்கும்.
கடைகளுக்கு வெளியே விற்பனைப் பொருட்களை வைக்க வேண்டாம் என கடைக்காரர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதால் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிப்பது சிரமமாகிவிடும் என்று வாரியம் தெரிவித்தது.