கிருமி தொற்றியவர்கள் வருகை புரிந்ததைத் தொடர்ந்து ஆறு பள்ளிவாசல்கள் மூடல்

யூசோஃப் இஷாக் பள்ளிவாசல் (இடது), புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அல்-ஈமான் பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்ட அந்த இரு பள்ளிவாசல்களாகும். படங்கள்: சாவ்பாவ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தனர். இதனையடுத்து அந்த ஆறு பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அல்-ஈமான் பள்ளிவாசல், பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், அப்துல் ஹமீது கம்போங் பசிரான் பள்ளிவாசல், ஹஜ்ஜா ஃபாத்திமா பள்ளிவாசல், அல்-ஃபலா பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்ட அந்த ஆறு பள்ளிவாசல்களாகும்.

சுத்தம் செய்யும் பணிகளுக்காக அவை மூடப்பட்டதை அடுத்து அவை நாளை (ஏப்ரல் 30) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இன்று (ஏப்ரல் 29) தெரிவித்தது.

இதற்கிடையே, இந்த ஆறு பள்ளிவாசல்களுக்கும் வருகை புரிந்த கொவிட்-19 நோயாளிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய சுகாதார அமைச்சுக்கு முயிஸ் உதவி வருகிறது. பள்ளிவாசலில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் இருப்பதன் முக்கியத்துவம், தொடர்புகளின் தடமறிவதற்கு ‘டிரேஸ்டுகெதர்’ பயன்பாடு ஆகியவற்றை இச்சம்பவம் நினைவூட்டுவதாக முயிஸ் அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

பள்ளிவாசல்
கிருமித்தொற்று
முயிஸ்
சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!