அமைச்சர் சண்முகம்: கொரோனா சூழலில் மனநலம் முக்கியமான ஒரு பிரச்சினை
கொவிட்-19 காரணமாக உலகஅளவில் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இத்தகைய ஒரு சூழலில் மனநலம் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம் என்றும் வருங்காலத்தில் அதன் முக்கியத்துவம் மேலும் கூடும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று (மே 1) தெரிவித்தார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் நகரச் சூழல், பரபரப்பான வாழ்க்கை முறை, மூப்படையும் மக்கள்தொகை ஆகியவற்றுடன் அந்தப் பிரச்சினை பல கோணங்களைத் தழுவியதாக உள்ளது என்று அவர் கூறினார்.
அது நாம் அனைவருமே தீவிரமாக ஈடுபாடு கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
பூமலையில் ‘கேர்கிவர்ஸ் அலையன்ஸ் லிமிட்டெட்’ என்ற அறப்பணி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வளர்ப்பு நாய்களுடன் உலாச் சென்றனர்.
அவர்களுடன் அமைச்சர் சண்முகமும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.