சிங்கப்பூர், ஹாங்காங் பயண ஏற்பாடு மீண்டும் ஒத்திவைப்பு

படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே தனிமை உத்தரவு இல்லாத பயண ஏற்பாடு மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அண்மையில் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் ஹாங்காங் வணிக, பொருளியல் துறை செயலாளர் எட்வர்ட் யாவும் இந்த விவகாரம் குறித்து இன்று (மே 17) காலை கலந்தாலோசித்ததாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

“சிங்கப்பூர், ஹாங்காங் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதில் இருதரப்பும் தொடர்ந்து வலுவான கடப்பாடு கொண்டுள்ளன. எனினும், சிங்கப்பூரில் அண்மையில் சமூக அளவில் முந்தைய கொவிட்-19 பாதிப்புகளுடன் தொடர்பில்லாத கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இந்த பயண ஏற்பாட்டைத் தொடங்குவதற்கான தகுதிக்கூறுகளை சிங்கப்பூரால் பூர்த்திசெய்ய முடியவில்லை,” என்று அமைச்சு விவரித்தது.

எனவே, சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பொதுமக்கள், பயணிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, பயண ஏற்பாட்டை ஒத்திவைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமைச்சு கூறியது.

பொதுச் சுகாதார நிலவரத்தை இரு நகரங்களும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதற்கான புதிய தேதியை அவை பின்னர் மறுஆய்வு செய்யும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூர்
ஹாங்காங்
கொவிட்-19
இருதரப்பு பயண ஏற்பாடு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!