ஊழியருக்கு கிருமித்தொற்று; உட்லண்ட்ஸ் ஃபேர்பிரைஸ் மூடப்பட்டது
உட்லண்ட்ஸ் அவென்யூ ஒன்றில் உள்ள சாம்பியன்ஸ் கோர்ட் அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பணியாற்றும் ஓர் ஊழியருக்குக் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 கிருமிப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
ஊழியருக்கு இன்று (மே 18) கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து என்டியுசி ஃபேர்பிரைஸ் அது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. புளோக் 570பியில் அமைந்துள்ள அந்தக் கிளை வரும் வியாழக்கிழமை வரை சுத்தம் செய்யும் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட கிளையில் பணியாற்றுவோர் அனைவரும் விடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொவிட்-19 தொற்றிய ஊழியருக்கு ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் கூறியது.