ஜோகூர் நம்பிக்கை: அக்டோபர் இறுதிக்குள் 90 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி

அக்டோபர் இறுதிக்குள் 90 விழுக்காடு பெரியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று ஜோகூர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முஹம்மது, 12 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனது தடுப்பூசி இலக்கைப் பற்றி விவரித்தார்.

“அக்டோபருக்குள் மாணவர்கள் மட்டுமல்ல, ஜோகூர் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நிறைவேற்றப்படும். தேசிய மற்றும் மாநில அளவிலான இலக்கு பூர்த்தி செய்யப்படும். அதாவது, 90 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடும் இலக்கை ஜோகூர் எட்டிவிடும்,” என்று முதல்வர் கூறினார்.

செப்டம்பர் 24ஆம் தேதி வரையில் மொத்தம் 37,144 பதின்ம வயதினருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 1,892 இளையர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

சனிக்கிழமைவரை பெரியவர்களில் 82.5 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 93.5 விழுக்காட்டினர் ஒருமுறை தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஜோகூர்
கொவிட்-19 தடுப்பூசி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!