சிங்கப்பூரில் புதிதாக 1,165 பேருக்கு கொவிட்-19; ஓமிக்ரான் பாதிப்பு குறைந்தது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் திங்கட்கிழமை நண்பகல் (ஜனவரி 17) நிலவரப்படி, புதிதாக 1,165 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பதிவான 863 தொற்றுப் பாதிப்புகளைவிட இது அதிகம்.

எனினும், ஓமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 609ஆக குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 675ஆக பதிவானது.

கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் அன்றாடம் வெளியிட்டு வரும் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 பாதிப்பு 1,000ஐ தாண்டியிருப்பது டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.

வாராந்திர தொற்று விகிதம் திங்கட்கிழமை 1.6ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த விகிதம் 1.49ஆக இருந்தது.

கொவிட்-19 தொற்றால் புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை.

மருத்துவமனைகளில் 217 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!