ஓமிக்ரான் அலை விரைவில் உச்சத்தைத் தொடலாம்: நிபுணர்கள்
சிங்கப்பூரில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 அலை விரைவில் உச்சத்தைத் தொடக்கூடும் என்று வல்லுநர்கள் முன்னுரைத்துள்ளனர்.
மற்ற நாடுகளில் பொதுவாக கிருமித்தொற்று சம்பவங்கள் கணிசமாக அதிகரித்த பிறகு எண்ணிக்கை குறையும். அதைக் கருத்தில்கொள்ளும்போது சிங்கப்பூரிலும் அவ்வாறே நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில்தான் ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வந்துள்ளன. அதனால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) தற்போதைய கொவிட்-19 அலை உச்சத்தைத் தொட்டிருக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேசிய பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர்கள் அலெக்ஸ் கூக், சு லி யாங் உள்ளிட்டோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் இவ்வாறு கூறினர்.