முகேஷ் அம்பானியின் வீடு தகர்க்கப்படும் என மிரட்டியவர் கைது

இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டைக் குண்டுவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டிய சந்தேக ஆடவர் ஒருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் பீகார் மாநிலம், டர்பங்கா மாவட்டத்தில் பிடிபட்ட அந்த ஆடவர், விசாரணைக்காக மும்பைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள சர் எச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு, அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து இரு தொலைபேசி அழைப்புகள் வந்தன.

மருத்துவமனையையும் முகேஷ் அம்பானியின் 'அன்டிலியா' வீட்டையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி அழைப்பை ரத்துசெய்துவிட்டார் அந்த ஆடவர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஆடவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்தது பீகாரை சேர்ந்த ஆடவர் என்று தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக தகவல் கிடைத்ததால், முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!