இர்ஷாத் முஹம்மது

பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வயது ஏற ஏற புதிய நண்பர்கள் கிடைப்பது மேலும் மேலும் கடினம் என்பதும் அதிலும் நெருங்கிய நட்பு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாதது என்பதை உடைத்தெறிந்துள்ளார் 78 வயது விக்டர் லீ.
தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராக 61 வயது த.ராஜசேகர் ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
ஓர் அந்நியர் உங்களை ஒரு ‘வாட்ஸ்அப்’ தொடர்புக் குழுவில் சேர்க்கிறார். ஒரு சுலபமான, ஈர்ப்பான பகுதிநேர வேலைவாய்ப்பை வழங்குகிறார்.
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதத்தில், பொருள்களை விநியோகிக்கும் மோசடியில் சுமார் 25 பேர் பாதிப்படைந்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.
செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு இது சவால்மிக்க காலமாக இருந்துவருகிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள், மாதம் $200 முதல் $700 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
விலைச் சலுகைகளை எதிர்பார்த்து, 33 வயதான திருவாட்டி எலீன் ஓங், இணையத்தில் நேரத்தை விரும்பிச் செலவிடுகிறார்.
மக்கள் செயல் கட்சி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் முற்போக்குடனும் நீடிக்க பன்முகத்தன்மையை வரவேற்பது, அனைவரையும் உள்ளடக்கியவாறு செயல்படுவது, ஒன்றிணைந்து முடிவெடுப்பது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அக்கட்சியின் ஜூரோங் ஸ்பிரிங் பிரிவு உதவி கிளைச் செயலாளர் டாக்டர் ஹமீத் ரஸாக், 38, கூறினார்.