திருப்பதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.
இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் நாடளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரங்கள் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகின்றன.