(காணொளி) இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்
இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று இரண்டாம் அலை மோசமாகி உள்ளதால் அங்கு ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையை அடுத்து, அந்நாட்டிற்கு உதவி செய்யும் விதமாக சிங்கப்பூர் உயிர்வாயுக் கலன்களைக் இரண்டு விமானங்களில் அனுப்பியுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை, 256 உயிர்வாயுக் கலன்களை இரண்டு சி-130 விமானங்களில் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பியது.
பாய லேபார் ஆகாயப் படைத் தளத்தில் உயிர்வாயுக் கலன்கள் விமானங்களில் ஏற்றப்படுவதைக் காட்டும் காணொளி இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.