புதிய லாபநோக்கமற்ற நிறுவனத்தின் தலைவராகும் முன்னாள் அமைச்சர் கோ பூன் வான்

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் தன்னுடைய ஊடக தொழில்களைச் சீரமைத்து புதிய லாபநோக்கமற்ற நிறுவனத்தை அமைக்கிறது. அந்தப் புதிய நிறுவனத்திற்கு முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்.

அந்தப் பொறுப்புக்குத் திரு கோ சரியானவர் என்று எஸ்பிஎச் நிறுவனத்தின் இப்போதைய நிர்வாக பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டு இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று (மே 10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

புதிய லாபநோக்கமற்ற நிறுவனம் ஓர் உத்தரவாத நிறுவனமாகச் செயல்படும். எஸ்பிஎச் நிறுவனத்தின் ஊடகத் தொழில்கள் அந்தப் புதிய நிறுவனத்தின்கீழ் வரும்.

எஸ்பிஎச் நிறுவனத்தின் ஊடகத் தொழில்களின் சீரமைப்பு, அதன் பங்குதாரர்களின் அங்கீகாரத்துக்கு உட்பட்டது.

பல்வேறு உயர் பதவிகளில் 25க்கும் அதிக ஆண்டுகள் பொதுச் சேவை அனுபவத்துடன் கூடிய திரு கோ, அந்தப் புதிய நிறுவனத்திற்கு வலுவான உத்திபூர்வ தலைமைத் துவத்தை வழங்குவார் என்று அமைச்சர் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

புதிய நிறுவனத்துக்குத் தலைவர் பொறுப்பை ஏற்க திரு கோ ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

திரு கோ 19 ஆண்டுகால சேவைக்குப் பிறகு அரசியலில் இருந்து 2020ல் ஓய்வு பெற்றார்.

கடைசியாக அவர் உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!