கொவிட் 19: 7,639 தொற்றுச் சம்பவங்கள், 1,074 பேர் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) நிலவரப்படி 7,639ஆக இருந்தது.

ஒப்புநோக்க சனிக்கிழமை நிலவரப்படி, 10,028 பேருக்குத் தொற்று உறுதியானது.

ஞாயிற்றுக்கிழமை நிவவரப்டி 1,074 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை 1,068.

மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்றுப் பாதிப்பில் 6,121 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

எஞ்சிய 1,518 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 92 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 21 பேர் உள்ளனர்.

கொவிட்-19க்கு மேலும் மூவர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 113 பேருக்கு தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்று விகிதம் ஞாயிற்றுகிழமை 1.48ஆக இருந்தது. சனிக்கிழமை அது 1.44ஆக இருந்தது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!