சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை திங்கள்கிழமை (பிப்ரவரி 28) நிலவரப்படி 13,544ஆக இருந்தது. ஒப்புநோக்க ஞாயிற்றுக்கிழமை 14,228 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்கை பெறுவோரின் எண்ணிக்கை 1,649 பேர் ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 1,553ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 221 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 49 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 94 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் சற்று குறைந்து நேற்று 1.09ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அது 1.14ஆக இருந்தது