பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தமக்கு கொவிட்-19 கிருமி தொற்றியிருப்பதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
தொற்றுக் காரணமாக கரையோரப் பூந்தோட்டங்கள் நடைபெறும் சக்குரா மலர் விழாவில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல வேளை தொற்று அறிகுறிகள் மிதமாக இருப்பதாகவும், தாம் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சக்குரா விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
தமது இல்ல உறுப்பினர்கள் இருவருக்குத் தொற்று இருந்ததால், வியாழக்கிழமை மாலை தாம் ஆர்டி பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானதாக அமைச்சர் விவரித்தார்.
அதோடு தமக்கு நல்ல பசி எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படுப்பட்டுள்ளதால், இந்த வார இடம்பெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.