சிங்கப்பூரில் வியாழக்கிழமை (மார்ச் 3) நிலவரப்படி 18,162 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஒப்புநோக்க புதன்கிழமை 19,159 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிவவரப்டி 1,685 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,708
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 232 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 53 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 171 பேருக்கு தொற்று உறுதியானது.