சிங்கப்பூரில் சனிக்கிழமை (மார்ச் 5) நிலவரப்படி 16,274 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. 1,559 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை 17,564 பேருக்குத் தொற்று உறுதியானது. 1,678 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கொவிட்-19க்கு மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 191 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 48 பேர் உள்ளனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 154 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாரந்திர தொற்று விகிதம் 0.95ஆக உள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தொற்று விகிதம் ஒன்றுக்குக் குறைவாக இருக்கிறது.