வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டின் விலைகள் தொடர்ந்து 20 மாதங்களாக பிப்ரவரியில் உயர்ந்துள்ளன. ஆனால் விற்கப்பட்ட வீடுகள் குறைந்துள்ளன.
சொத்துச் சந்தையைத் தணிக்கும் நடவடிக்கைகள் சென்ற டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டு விற்பனை குறைந்துள்ளது.
சென்ற மாதம் மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.6 விழுக்காடு அதிகரித்தன. ஒப்புநோக்க ஜனவரியில் அது 1.1 விழுக்காடு. 2021ஆம் பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது, விலைகள் 12 விழுக்காடு உயர்ந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டை, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் விலைகள் ஏற்றம் கண்டன.
பிப்ரவரியில் 29 கழக வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
கேன்டோன்மண்ட் ரோட்டில் உள்ள பின்னக்கல்@டக்ஸ்டன் புளோக்கில் உள்ள ஒரு ஐந்தறை வீடு ஆக அதிகமாக $1,308,000க்கு விற்கப்பட்டது.
இதற்கிடைய விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 22 விழுக்காடு குறைந்துது. அதாவது, 1,904 வீடுகள் சென்ற மாதம் விற்கப்பட்டன. ஜனவரியல் இந்த எண்ணிக்கை 2,442 ஆக இருந்தது.
சீனப் புத்தாண்டு, கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை சென்ற மாதம் குறைந்ததாக சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறினர்.