சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டு புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து முனையங்களும் இப்போது செயல்பாட்டில் உள்ளன.
இதன் வழி ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதிகளை சாங்கி விமான நிலையம் மீண்டும் பெற்றுள்ளது.
தொற்று காலத்தின்போது பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்ததைத் தொடர்ந்து, முனையம் இரண்டு மற்றும் நான்கு மூடப்பட்டன.
நான்காவது முனையம் சென்ற மாதம் திறக்கப்பட்டது. இரண்டாவது முனையத்தின் வருகை கூடத்தின் செயல்பாடுகள் மே மாதம் மீண்டும் தொடங்கின.
தென்கிழக்காசியாவுக்குப் பறக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைகள் முனையம இரண்டிலிருந்து செயல்படும். ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளும் இரண்டாவது முனையத்திலிருந்து செயல்படும்.
இரண்டாவது முனையத்தின் பாதி புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முனையத்தின் வடக்கு பிரிவில் புதுப்பிப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை 2024ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.