சவூதி புரோ லீக் காற்பந்து ஆட்டம் ஒன்றில் வெற்றிபெறத் தவறியதால் தண்ணீர் போத்தல்களை உதைத்து, தமது கோபத்தை வெளிப்படுத்தினார் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அல்- இட்டிஹாட் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் ரொனால்டோவின் அல்-நசர் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோற்றதால் ரொனால்டோவின் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
அத்துடன், ரொனால்டோவின் கவனத்தைச் சிதறடிக்கும் விதமாக, அல்- இட்டிஹாட் அணி ரசிகர்கள் ஆட்ட நேரம் முழுவதும் ‘மெஸ்ஸி மெஸ்ஸி’ எனக் கத்தி, ரொனால்டோவைக் கடுப்பேற்றினர்.
சவூதி புரோ லீக்கில் இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ரொனால்டோ எட்டு கோல்களை அடித்துள்ளார்.