மோடி

சென்னை: இம்மாதம் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
புதுடெல்லி: நாடு விரும்பும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. இதனால் மூன்றாவது முறையாக பாஜகவை மக்கள் தேர்வு செய்வார்கள் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், சுரு பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மற்ற கட்சிகளைப் போல் வெற்று அறிக்கைகளை வெளியிட மாட்டோம். பாஜக நிச்சயம் சொல்வதைச் செய்யும், செய்வதையே சொல்லும்,” என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து அவ்வப்போது பேசி வருகிறார்.
டெல்லி: தமிழ்நாட்டின் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.