சாங்கி விமான நிலையம்

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் பயணிகளுக்குக் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு செல்வதற்கு மூன்று மணி நேரம் இருக்கும்போது பயணப் பெட்டிகளை விமானத்துக்கு அனுப்பிவைக்கும் வசதி தயாராகிவிட்டது.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு, சாங்கி விமான நிலையம் வழியாக இடம்பெறும் பயணிகள் போக்குவரத்து மீண்டு வருகிறது.
பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் சோதித்து வருகிறது.
சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வெளிநாட்டு ஆடவர்கள் இருவர் $20,000க்குமேல் மதிப்புள்ள சிங்கப்பூர், வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்ததற்காக விசாரிக்கப்படுகின்றனர்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தொலைந்துபோன பணப்பையிலிருந்த பற்றட்டையைத் தன் தேவைக்குப் பயன்படுத்திய துணைக் காவல் அதிகாரிமீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.