பரிசு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம்: தமிழ்நாட்டின் தென்பகுதியில் அண்மையில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
பலதுறைத் தொழிற்கல்லூரி படிக்கும் வரை படிப்பில் ஆர்வமின்றி இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் கடுமையாக உழைத்து 4.69 தரப் புள்ளிகளுடன் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார் முஹம்மது ஹம்சா சையது அகமது கபீர்.
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மற்றும் முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி மற்றும் இலக்கியப் பிரிவான இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் பேசும் கலை வளர்ப்போம் மாதாந்திர நிகழ்ச்சி மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதிய நிலா மு. ஜஹாங்கீர் தலைமையில் நவம்பர் 18ஆம் தேதி ஜாலான் புசார் சமூக மன்ற அறையில் நடைபெற்றது. 

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்ற ஆலோசகர் திருமதி மாலதி பாலாவும் எடுகுவஸ்ட் கல்வி பயிற்சி நிறுவன தலைமை நிர்வாகி திரு இத்ரீஸ் மாலிம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 

மாணவர்கள், இளையர்களின் சிற்றுரைகளுக்குப் பின்னர் சிறப்புப் பேச்சாளர் வாழ்நாள் கல்வி பற்றியும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் கட்டணக்கழிவு மற்றும் ஊக்குவிப்பு குறித்தும் விளக்கமான விழிப்புணர்வு உரை வழங்கினார். 

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்ட உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் தீபாவளிக் கொண்டாட்டம் பற்றிய மகிழ்ச்சிகளும் பகிரப்பட்டன.