காஸா

கெய்ரோ: சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லவனும் ஞாயிறன்று (மே 19) சந்தித்தனர்.
ராஃபா: இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட 800,000 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் பிரிவுத் தலைவர் ஃபிலிப் லஸாரினி எக்ஸ் தளத்தில் மே 18ஆம் தேதியன்று பதிவிட்டார்.
பேங்காக்: சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர் இருவர் மாண்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் வெள்ளிக்கிழமையன்று (மே 17) வருத்தம் தெரிவித்தார்.
தோஹா: ஹமாஸ் அமைப்புக்கான மலேசியாவின் ஆதரவைப் புதுப்பிப்பதாக ஹமாஸ் குழுவுடனான மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அண்மைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெனிவா: சூடான், காஸா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாக 2023ஆம் ஆண்டு இறுதியில் 75.9 மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.