நாடகம்

மகாபாரதத்தில் அங்கம் வகிக்கும் ‘ருக்மிணி கல்யாணம்’, காலங்காலமாகக் கூறப்பட்டு வரும் சுவைமிகு தெய்வீகக் காதல் கதையாக இருந்தபோதும் அது ஒவ்வொரு தலைமுறைக்கும் உகந்த புதிய நாடக, இசை வடிவங்களைப் புனைந்து மக்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
மும்பையின் ‘குல்ஃபி’ கடைகளை மையமாகக் கொண்டு ‘பேரடைஸ் ஆர் தி இம்பர்மனென்ஸ் ஆஃப் ஐஸ்கிரீம்’ (Paradise or the Impermanence of Ice Cream) எனும் நாடகம், மே 26ஆம் தேதி வரை கே.சி. கலை மையத்தில் அரங்கேறவிருக்கிறது. 
இந்தியக் காவியமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது ‘டிரையேங்கல் எடியுகேஷன் கன்சல்டன்சி’ நிறுவனத்தின் ‘பாலபாரதம்’ நாடகம்.
சென்னையில் மார்ச் மாதம் நடந்த ‘எடிசன்’ விருது நிகழ்ச்சியில் ‘ஓ பட்டர்ஃப்லை’ சிங்கப்பூர் நாடகத் தொடர், சிறந்த அனைத்துலகத் தமிழ் நாடகத் தொடருக்கான விருதை வென்றது.
ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.