கதை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள நீதியரசர் புகழேந்தி சிறப்புரை ஆற்றவிருக்கிறார். அவர் ‘சிறுகதையைப் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் உரையாற்றுவார். 
குழந்தைகள் மனதில் நினைப்பதை துணிச்சலுடன் வெளியில் சொல்லப் பழகுவதற்கு ‘கதை சொல்லல்’ ஒரு சிறந்த வழி. அதிலும் குறிப்பாக தமிழரின் பாரம்பரிய வில்லுப்பாட்டுப் பாணியில் குழந்தைகள் கதை சொல்வதைப் பார்ப்பதே தனி அழகுதான் என்கிறார் ஏகேடி நிறுவனத் தலைவர் திருவாட்டி ராணி கண்ணா.
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் நடையில் எளிதான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகத் தெளிவான கருத்துகளோடும் ஒன்பது தலைப்புகளோடும் பிறந்துள்ளது ‘எண்ணம் வானவில்லின் வண்ணம்’ எனும் ஒரு கதைப்புத்தகம்.
ராம் சந்தர்
ஆண்டுதோறும் நடக்கும் தேசிய நூலக வாரியத்தின் ‘ரீட்! ஃபெஸ்ட்’ விழாவை முன்னிட்டு ஃபுனான் கடைத்தொகுதியில் ‘பாப் அப்’ கண்காட்சி ஒன்றைத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.