இந்தியா

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மும்பை/டெல்லி: பிரசித்திபெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பட்டதாரிகளிடையே நல்ல சம்பளம் வழங்கும் வேலைகளைத் தேடுவதற்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
பன்ஸ்வாரா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கும் என்று பிரதமர் மோடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேரணி சென்றார்.
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கக்கோரி சட்ட மாணவர் ஒருவர், வழக்கறிஞர் கரண்பால் சிங் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ‘நாங்கள் இந்திய மக்கள்’ என்ற பெயரில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி: மத்திய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால வரவு செலவு கணக்கில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.