ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏழாவது சுற்று முடிவில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். 

அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இவ்விருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 33,672ஆக உள்ளது. 

இவர்களுக்கு அடுத்தபடியாக, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 2,964 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வெறும் 431 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார்.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (மார்ச் 2) இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!