இந்தோனீசியப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி குறைப்பு

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் தவிர்த்து, இந்தோனீசியாவில் இருந்து வரும் மற்ற பயணிகளுக்கான நுழைவு அனுமதி உடனடியாகக் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தோனீசியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, சிங்கப்பூரின் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.

கூடுதல் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நுழைவு அனுமதி பரிசீலிக்கப்படலாம் என்று அமைச்சு கூறியிருக்கிறது.

கடந்த 21 நாள்களுக்குள் இந்தோனீசியாவிற்குச் சென்றவர்கள் எவரும் சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தக் கட்டுப்பாடு நாளை மறுநாள் இரவு 11.59 மணியில் இருந்து நடப்பிற்கு வரும்.

அத்துடன், இந்தோனீசியாவில் இருந்து வருவோரும் சிங்கப்பூருக்குப் புறப்படுமுன் 48 மணி நேரத்திற்குள் ‘பிசிஆர்’ பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

அவ்வாறு ‘தொற்று இல்லை’ என்பதற்கான ‘பிசிஆர்’ பரிசோதனைச் சான்றிதழை வழங்கத் தவறுவோர்க்குச் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

(இந்தச் செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!