கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு ஏழு நாள்களுக்கு முன்னர் ஊழியர்கள் வேலையிடத்தில் இருந்திருந்தால், அந்த நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் 14 நாள்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிவதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.
வேலையிடத்தில் தொற்றுப் பரவலைத் தடுக்க முதலாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது. எடுத்துக்காட்டாக, மருத்துவ விடுப்பில் சென்ற ஊழியர்கள் வேலையிடத்திற்குத் திரும்புவதற்கு முன்னர் தங்களது சுகாதாரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.
“பிசிஆர் பரிசோதனையில் தங்களுக்குத் தொற்று உறுதியானதால் ஊழியர்கள் முதலாளிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,” என்று அமைச்சு கூறியது.