உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சவாடிகளில் வாரயிறுதியில் அதிகப் போக்குவரத்து

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி திறந்து விடப்பட்டதிலிருந்து, கடந்த வாரயிறுதியின்போதுதான் ஆக அதிகமானவர்கள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்தனர்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் இதை புதன்கிழமை (ஜூன் 8) அன்று தெரிவித்தது.

உட்லண்ட்ஸ், துவாஸ் சுங்கச் சாவடிகளில் இந்த ஜூன் மாதம் முடியும்வரை பயணிகள் அதிகப் போக்குவரத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒவ்வொரு நாளும் சராசரியாக 262,000 பயணிகள் சோதனைச்சாவடிகளைக் கடந்தனர்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தினமும் பயணம் செய்பவர்கள் குடிநுழைவுச் சோதனைகளைக் கடந்துசெல்ல கூடுதல் நேரம் எடுக்கும் என்பதைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், போக்குவரத்து நிலவரத்தைக் கவனத்துவிட்டு அவர்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை இந்த ஆண்டு மே 28ஆம் தேதி தொடங்கியது.

ஜூன் 27ஆம் தேதி பள்ளி மீண்டும் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!