மலேசியாவில் ஒருவருக்குத் மூன்று நாள்களுக்கு மதிய உணவு விநியோகிக்க அழைப்பு வந்திருக்கிறது.
150 மதிய உணவுப் பெட்டிகளை விநியோகிப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் 43 வயது ஜோலீன் ராபின்.
ராணுவ அதிகாரி என்று கூறி ஒருவர் இவரின் நண்பரைத் தொடர்பு‘கொண்டிருக்கிறார்.
அந்நபரை திருவாட்டி ஜோலீன் தொடர்புகொண்டபோது தனக்கு 150 மதிய உணவுப் பெட்டிகள் தேவை என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இருவரும் இது குறித்து திருவாட்டி ஜோலீனை அழைத்திருக்கின்றனர்.
உணவுப் பெட்டிகளைப் பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தன்னைத் தொடர்புகொண்டோரின் வாட்ஸ்ஆப் கணக்குகளில் குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன.
திருவாட்டி ஜோலீன் தங்களைத் தொடர்புகொள்ளாதபடியும் அவர்கள் செய்தனர்.
விழா ஒன்றில் திருவாட்டி ஜோலீன் உணவுப் பெட்டிகளைக் குறைவான விலைக்கு விற்றார்.
இச்சம்பவம் இணையத்தில் பலருக்குத் தெரிய வந்தது.
ஏமாற்றுக்காரர்கள் தனது பெயரை தவறாகப் பயன்படுத்தியதை ராணுவ அதிகாரி ஒருவர் திருவாட்டி ஜோலீனிடம் தெரிவித்தார்.