அமெரிக்காவில் இரண்டு வயது சிறுவனால் தந்தை சுட்டுக் கொலை

ஒரு இரண்டு வயது சிறுவன் தனது தந்தையைச் சுட்டுக்கொன்ற சோகம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்துள்ளது.

அவசர எண் 911க்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்தனர். ஒரு ஆடவருக்கு அவருடைய மனைவி முதலுதவி வழங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

முதலில் அந்த 26 வயது ஆடவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கருதினர். தம்பதியரின் மூத்த பிள்ளையை விசாரித்ததில், துப்பாக்கியை எடுத்து தன்னுடைய தம்பி சுட்டதாக அவன் கூறினான்.

குண்டுகள் இருந்த துப்பாக்கியை ஒரு பையில் வைத்து அதை தரையில் பெற்றோர் விட்டுச்சென்றதாகக் கூறப்பட்டது. துப்பாக்கியைக் கண்ட சிறுவன் அதை எடுத்து தனது தந்தையின் முதுகில் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே சில குற்றங்களைப் புரிந்த பிள்ளையின் பெற்றோர் நிபந்தனைகளுடன் தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தபோது, இச்சம்பவம் நடந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!