ஒரு இரண்டு வயது சிறுவன் தனது தந்தையைச் சுட்டுக்கொன்ற சோகம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடந்துள்ளது.
அவசர எண் 911க்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை அதிகாரிகள் விரைந்தனர். ஒரு ஆடவருக்கு அவருடைய மனைவி முதலுதவி வழங்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
முதலில் அந்த 26 வயது ஆடவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கருதினர். தம்பதியரின் மூத்த பிள்ளையை விசாரித்ததில், துப்பாக்கியை எடுத்து தன்னுடைய தம்பி சுட்டதாக அவன் கூறினான்.
குண்டுகள் இருந்த துப்பாக்கியை ஒரு பையில் வைத்து அதை தரையில் பெற்றோர் விட்டுச்சென்றதாகக் கூறப்பட்டது. துப்பாக்கியைக் கண்ட சிறுவன் அதை எடுத்து தனது தந்தையின் முதுகில் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே சில குற்றங்களைப் புரிந்த பிள்ளையின் பெற்றோர் நிபந்தனைகளுடன் தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தபோது, இச்சம்பவம் நடந்துள்ளது.