அமெரிக்காவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலையில் புகுந்த துப்பாக்கிக்காரன் குறைந்தது மூவரைச் சுட்டுக்கொன்றான். ஒருவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
சந்தேக நபர் வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது, காவல் துறை அதிகாரிகளுக்கும் துப்பாக்கிக்காரனுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நேர்ந்தது. அதில் துப்பாக்கிக்காரன் சுடப்பட்டான். அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
23 வயதான துப்பாக்கிக்காரன் தொழிற்சாலை ஊழியர் என நம்பப்படுகிறது. மாண்டவர்கள் மூவரும் அவனுடைய சக ஊழியர்கள் எனக் கூறப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. துப்பாக்கிகளை விற்பதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர அந்நாட்டு நாடாளுமன்றம் முயற்சிகள் எடுத்துவருகிறது.