ஐரோப்பாவில் இரண்டு வாரங்களில் குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் மும்மடங்காகியுள்ளன.
அதைத் தொடர்ந்து அந்த கண்டத்தில் குரங்கம்மை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் எடுக்கப்படும் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு நிறுவனம் அரசாங்கங்களிடமும் பொதுமக்களிடமும் அழுத்தமாகக் கூறியுள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து உலகளவில் 3,400க்கும் அதிகமான குரங்கம்மை கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, குரங்கம்மை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 'பவேரியன் நார்டிக்' நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளில் கூடுதலாக 2.5 மில்லியன் தடுப்பூசிகளைத் தருவிக்க அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது.