ஆஸ்திரேலியாவில் புதிய கொவிட்-19 அலை தலைதூக்கியதைத் தொடர்ந்து நான்காவது தடுப்பூசியைப் போட அந்நாடு தயாராகிவருகிறது.
நாடு மூன்றாவது அலையை எதிர்நோக்குவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறினார்.
ஓமிக்ரான் துணைத் திரிபுகளான பிஏ.4, பிஏ.5 ஆகியவை அங்கு அதிகமானோரை பாதித்துள்ளன. சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 4,000 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அடுத்த வாரத்திலிருந்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நான்காவது தடுப்பூசி அதாவது இரண்டாவது கூடுதல் தடுப்பூசியை போட்டுகொள்ளலாம். இதற்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் பேர் தகுதிபெறுவர் எனக் கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்ட 95 விழுக்காட்டினர் குறைந்தது இரண்டு தடுப்பூசிகள் போட்டுகொண்டுள்ளனர். 75 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இது நாட்டில் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது.