உக்ரேன் தலைநகர் கியவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று காலை உச்சநேரத்தின்போது, பல நகரங்களில் குண்டுகள் போடப்பட்டன.
கிரைமியாவுக்கு இட்டுச்செல்லும் பாலத்தின் ஒரு பகுதி வெடிக்கப்பட்டதை ஒரு தீவிரவாத செயல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார். இதற்கான பதிலடி உக்ரேனில் திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல்கள் என நம்பப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக மோசமான தாக்குதல் இதுவென கூறப்படுகிறது.
கியவ்வில் பல கட்டடங்கள், வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மீட்புப் பணியாளர்கள், இராணுவ வீரர்கள், முதலுதவியாளர்கள் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு உதவிவருகின்றனர்.