எல்லா மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து கற்க உகந்த சூழல் இருக்காது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் திங்கட்கிழமை 11ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கட்டங்கட்டமாகத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிறப்புத் தேவையுள்ளோருக்கான பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கட்டம் கட்டமாகத் தொடங்குவது பற்றி கூடுதல் விவரம் பின்னர் அளிக்கப்படும் என்றும் அமைச்சு நேற்று கூறியது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வரையிலான மாணவர்களும் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களும் வீட்டிலிருந்து பாடங்களைக் கற்று வருகின்றனர்.

பள்ளிகளில் கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்கவும் தடுப்பூசி போடுவதற்கு இன்னமும் தகுதிபெறாத 12 வயதுக்குக் கீழ் உள்ள பிரிவினரைப் பாதுகாக்கவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதும் அதன் நோக்கம் என்று அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் எல்லா மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து கற்பதற்கான உகந்த சூழல் இருக்காது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு வீட்டிலிருந்து பாடங்களைக் கற்றால் அவர்களின் கல்வித்திறன், சமூக-மனநலன் ஆகியவை பாதிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து திரு சான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை
மாணவர்கள்
கல்வி அமைச்சு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!