இந்தியா

திருவனந்தபுரம்: சாகர் யூவராஜ் எனும் சரக்குப் படகு இரண்டாக உடைந்ததில் இரண்டு கேரள மீனவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் அந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டனர் என்று கேரள கடலோரக் காவல்படை திங்கட்கிழமை அன்று தெரிவித்தது. அந்தப் படகின்மீது கப்பல் மோதியதாகக் கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இமாம் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வயது குறைந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கன்னடத் தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம், ஞாயிற்றுக்கிழமை (மே 12) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 35. இவரது திடீர் மரணம் தொலைக்காட்சித் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருது பெற்ற 80 வயது பழங்குடியின மூதாட்டி பூர்ணமாசியின் பாதம் தொட்டு ஆசிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.