நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்கு, முன்கூட்டியே பணம்செலுத்தப்பட்ட நெட்ஸ் அட்டைகள் இலவச பரிமாற்றம் செய்துகொள்வது ‘மறு அறிவிப்பு வரும் வரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பரிமாற்றம் பொதுப் போக்குவரத்துப் பயணச்சீட்டு அலுவலகங்களில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருந்தது.
ஜூன் மாதம் முதல் பேருந்து, ரயில் பயணங்களுக்கு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பயணச்சீட்டு தளமான சிம்பிளிகோவுடன் இணைக்கப்பட்ட அட்டைகளே பயன்படுத்த முடியும். அதையொட்டி நெட்ஸ் ஃபிளாஷ்பே, பெரியவர்களுக்கான சில ஈஸிலிங்க் அட்டைகளை பயன்பாட்டிலிருந்து அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இலவச பரிமாற்றம் இடம்பெறுகிறது.
“சிம்ப்ளிகோ பயணச்சீட்டு அலுவலகங்களில் வழங்கப்படும் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைக்கான அட்டை பரிமாற்ற சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடம்பெறாது,” என்று ஜனவரி 18ஆம் தேதி நள்ளிரவு, கட்டண நிறுவனமான நெட்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
பரிமாற்றம் எப்போது தொடங்கும் என்று அது கூறவில்லை.
ஜூன் 1 முதல், வயது வந்தோருக்கான பேருந்து, ரயில் கட்டணங்களை முன்கூட்டியே பணம் நிரப்பப்பட்ட நெட்ஸ் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இந்த ஈஸிலிங்க் அட்டை சிம்ப்ளிகோவுடன் ஒத்துப்போகக்கூடியதாக இருக்க வேண்டும். இது கைப்பேசி பணப்பையில் இணைக்கப்பட்ட கடன் அல்லது ரொக்கக் கழிவு அட்டை அல்லது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஒத்துப்போகக் கூடியது.
இந்த நடவடிக்கையால் மூத்தோர், மாணவர்கள் உட்பட சலுகை அட்டை பயன்படுத்தும் பயணிகள் பாதிக்கப்படமாட்டார்கள்.
ஃபிளாஷ்பே அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளை ஜூன் 1 வரை பொதுப் போக்குவரத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் பயணச்சீட்டு இயந்திரங்களில் பணம் நிரப்பலாம் என்றும் ஜனவரி 19 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நெட்ஸ் கூறியது.
இலவச பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அது கூறவில்லை, இது பொதுப் போக்குவரத்துப் பயணங்களுக்கு ஃபிளாஷ்பே அட்டைகளை வைத்திருப்பவர்கள் சிம்ப்ளிகோவுக்கு மாறுவதற்கான காலத்தைப் பாதிக்குமா என்பதையும் அது குறிப்பிடவில்லை.
கட்டம் கட்டமாக அகற்றப்பட்ட பின்னர், நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டை மூலம் பொதுப் போக்குவரத்தில் கட்டணம் செலுத்த முடியாது. ஆனால் கார் நிறுத்தம், மின்னிலக்க சாலைக் கட்டணம், கடைகளில் பணம் செலுத்துவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.