சமூக அளவில் ஒருவர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 26) நண்பகல் நிலவரப்படி புதிதாக 45 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய 43 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த 43 பேரில் 13 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 25) சிங்கப்பூரில் 40 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், 10 பேர் நிரந்தரவாசிகள், அறுவர் இல்லப் பணிப்பெண்கள். அந்த 40 பேரில் ஐவர், நான்கு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.