போலிஸ் வேனுக்கும் லாரிக்கும் இடையே விபத்து; ஐந்து போலிஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மருத்துவமனையில்

ஜூரோங்கில் போலிஸ் வேனுக்கும் லாரிக்கும் இடையே நேற்று (மே 7) இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த ஐந்து போலிஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஜாலான் புரோ, ஜூரோங் போர்ட் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து இரவு 9 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

ஐந்து போலிஸ் அதிகாரிகள், ஓர் ஆண் லாரி ஓட்டுநர், லாரியில் இருந்த 11 ஆண் பயணிகள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.

“அந்த 17 ஆடவர்களும் 20க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது,” என்று போலிஸ் கூறியது.

சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளி ஒன்றில், லாரியின் முன்கண்ணாடி நொறுங்கியிருப்பதைக் காண முடிந்தது. சாலையில் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. போலிஸ் வேனின் இடதுபுறமும் மோசமாக சேதமடைந்து காணப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!