குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைகளில் பயன்படுத்த சிங்கப்பூர் குடும்பங்களுக்கு தலா $100 சிடிசி எனும் சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச் சீட்டுகள் இன்று வழங்கப்படும்.
1.22 சிங்கப்பூர்க் குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும்.
இம்மாதம் 11ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்றுகொள்ளலாம். அவற்றை ஆண்டு இறுதி வரை பயன்படுத்தலாம். ஏறத்தாழ 16,000 உணவங்காடி நிலையங்களிலும் இதர கடைகளிலும் அவற்றைப் பயன்படுத்தி செலவு செய்யலாம்.
அடுத்தாண்டு $200 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும். அவற்றைப் பேரங்காடிகளில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.