வியாழக்கிழமை (ஜூன் 14) அன்று சிங்கப்பூரில் இருவருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்தது. 11.4 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட டோட்டோ ஜாக்பாட் பரிசை இருவர் பகிர்ந்துகொண்டனர்.
முதல் பிரிவுக்கான பரிசுத்தொகை மொத்தம் $11,462,599 ஆகும். அதனால் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா $5.7 மில்லியன் கிடைக்கும்.
ஜாக்பாட் பரிசைப் பெற்ற எண்கள் 8,10, 15, 36, 39, 44ஆக இருந்தன. கூடுதல் எண் 9.