தமிழ்நாடு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாள்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோவில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரில் 3 சிறார்கள் உள்பட 9 பேரை காவல்துறை கைது செய்தது.
சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு திங்கட்கிழமை (மே 13) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 67.